என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ரெயில் மீது கல்வீச்சு"
- சென்னை கோட்ட மேலாளர் எச்சரிக்கை
- 139 இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயணிகள் தகவல் தெரிவிக்கலாம்
அரக்கோணம்:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்துக்கு உட்பட்ட சென்னை- அரக்கோணம், சென்னை- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே மர்ம கும்பல் சிலர் கற்களைக் கொண்டு ஓடும் ரெயில்கள் மீது சமீப காலமாக வீசி வருகின்றனர்.
இது குற்றமாகும். ரெயில்கள் மீது கற்களை வீசினால் அவர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், ரெயில் மீது கல்லெறிதலில் இருந்து பாதுகாப்பான ரெயில் பயணம் மேற்கொள்வது குறித்து அனைத்து பயணிகளுக்கும் போலீசார் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை ரெயில் மீது கல்வீசியதாக 72 குற்றச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதுதொடர்பாக 18 பேர் மீது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. ரெயில் மீது கல் எறியும் சம்பவங்கள் குறித்து 139 என்ற இலவச எண்ணை தொடர்பு கொண்டு பயணிகள் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்